மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, December 18, 2015 ஒரு நகரின் கட்டமைப்பு என்பது தக்க மழைநீர் வடிகாலையும் உள்ளடக்கியதே. நவம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையின் அளவு 1,219 மில்லிமீட்டர். இது நவம்பர் மாதம் பொழிகிற சராசரி மழையான 407மி.மீயைவிட மூன்று மடங்கு அதிகம். டிசம்பர் 1-ம் தேதி தாம்பரத்தின் மழைமானி காட்டிய அளவு 494 மி.மீ. ஒரு மாத சராசரி மழையைவிட இந்த ஒரு நாள் மழை அதிகமானது. கடந்த நூறாண்டுகளில் இப்படிக்Continue reading “நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்”
Category Archives: Politics and Society
அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 – 2015)
ஒரு மானுட நேயர் மு. இராமனாதன் Published in Kalachuvadu, December 2015 எனது பர்மா குறிப்புகள்’ புத்தகத்தில் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிற இடத்தில் யூனூஸ் பாய் இப்படித் தொடங்குவார்: “1924ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன்.” டிசம்பர் 25 என்று தேதியைக் குறிப்பிடமாட்டார். ஒருவேளை தனது மரணச் செய்தியைத் தானே எழுதுகிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தால், “2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உயிர்நீத்தேன்” என்று எழுதியிருக்க மாட்டார். மாறாக, “2015ஆம் ஆண்டு திருநாளான பக்ரீத்Continue reading “அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 – 2015)”
மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, November 5, 2015 இந்தத் தேர்தலால் மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்து, ஜனநாயகம் மலருமா? ரங்கூன் நகரெங்கும் தோரணங்களாய் ஆடுகின்றன சிவப்புக் கொடிகள். அவற்றில் போராடும் பொன்னிற மயிலொன்றின் சித்திரமும் இருக்கிறது. எதிர்க் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் கொடிகள் அவை. கூடவே, கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியின் படங்களும் காற்றில் அசைகின்றன. ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் ஆளுங்கட்சியின் பச்சை நிறக் கொடிகளும் இடையிடையே ஆடத்தான் செய்கின்றன. மியான்மர்Continue reading “மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்”
எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே?
மு.இராமனாதன் Published in The Hindu-Tamil, October 26, 2015 நல்ல எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாப்பது ஓர் அறிவுலகத்தின் சமூகக் கடமையல்லவா? ஏடு தேடுதல் என்கிற சொற்றொடர் உடனடியாக நினைவூட்டுகிற ஆளுமை உ.வே.சா. ஏட்டுச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை அலைந்து திரிந்து, தேடி எடுத்து, பரிசோதித்து, அரும்பதவுரை எழுதி, அச்சிட்டு வழங்கியவர் உ.வே. சாமிநாதையர் (1855 – 1942). இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பிரதி எடுப்பதும், நூல்களை அச்சிடுவதும், சேகரித்து வைப்பதும் எளிதாகிவிட்டன. எனில், தமிழ்ப்Continue reading “எத்தனை காலந்தான் ஏடு தேடுவார் தமிழ்நாட்டிலே?”
சீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, September 3, 2015 டோக்கியோவில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலான யூ.எஸ்.எஸ். மிசோரியில், சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த ஜப்பானியப் பிரதிநிதிகள்… போரிடுவதற்கு மட்டுமில்லை, மன்னிப்புக் கேட்பதற்கும் துணிவு வேண்டும். இன்று பெய்ஜிங் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தியானன்மென் சதுக்கத்தில் 12,000 துருப்புகளின் அணிவகுப்பு நடக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னால், 1945 செப்டம்பர் 2-ம் நாள் டோக்கியோவில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலில், ஜப்பானியர்கள் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டாம் உலகப்Continue reading “சீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்”
சிங்கப்பூரின் பொன்விழா
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, August 8, 2015 சிங்கப்பூர் நிகழ்த்திவரும் சாதனைகளும் அதன்முன் உள்ள சவால்களும். சிங்கப்பூர் தனி நாடானது ஆகஸ்ட் 9, 1965. ஆனால், யாரும் ஆடவில்லை பள்ளுப் பாடவில்லை. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று கொண்டாடவும் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் பிரதமராக இருக்கப்போகும் லீ குவான் யூ மிகுந்த கலக்கத்திலிருந்தார். இந்த நகரை எப்படி ஒரு தனிநாடாக மாற்றப்போகிறோம் என்று மலைத்துப்போயிருந்தார். மழை நசநசத்துக்கொண்டிருந்தது. எங்கும் புழுக்கம். தனது உணர்ச்சிகளைக்Continue reading “சிங்கப்பூரின் பொன்விழா”
அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்
மு. இராமனாதன் Published in The Hindu Tamil- July 10, 2015 வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கட்டுமான விதிகள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் என்ற பெயர் சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது. இந்த விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம் என்றனர் சிலர். சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள்Continue reading “அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்”
தொடுதிரை அடிமைகள்
மு. இராமனாதன் Published in The Hindu Tamil- June 17, 2015 உங்களிடம் தொடுதிரை மோகம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நோமோ-ஃபோபியா என்ற நோய் இருக்கிறது ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னார்: “வள்ளுவர் தொட்டனைத்து ஊறும் அறிவு என்று சொல்கிறார். அந்தக் காலத்தில் அவர் தொடுதிரைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால், இன்று ஸ்மார்ட்போன் திரையைத் தொட்டால் தகவல்கள் ஊறிப் பெருகி வழிந்தோடுகிறதல்லவா? இப்படியாக வள்ளுவர் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக விளங்குகிறார்”. அறிஞர் வள்ளுவரைப் பற்றிச் சொன்னதைContinue reading “தொடுதிரை அடிமைகள்”
நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 14 May 2015 அந்தக் காலத்தில் +2 இல்லை. பள்ளிப் படிப்பு பதினோராம் வகுப்போடு முடியும். அது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்டது. பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு பி.யூ.சி. எனப்பட்டது. இதைக் கலைக் கல்லூரிகளில் படிக்க வேண்டும். ஆக 10, 11, 12 என ஒவ்வொரு வகுப்பையும் தனித்தனியாகப் படித்துத் தேற வேண்டும். 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நடுவில், கொஞ்சமல்ல, 11-ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும்Continue reading “நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்”
காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா
மு. இராமனாதன் Published in The Hindu Tamil- May 8, 2015 சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று! கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத்Continue reading “காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா”